Tuesday, December 16, 2008

'மூல தாய் மொழி எதுவென்றே தெரியாத பைபிளை இறைவேதம் என்று நம்பி செயல்படும் கிறிஸ்த்தவர்கள், அதை பிறருக்கு எத்தி வைக்கும் பணியைக் கடந்து இஸ்லாத்தைப் பற்றி மோசமாக எழுதி வருவதால் பைபிளின் நிலவரத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டும் நிலை உருவாகியுள்ளது. இந்த வலைப்பூவின் எழுத்துக்களும் ஆடியோக்களும் பைபிளைத் தோலுரிக்கும்.

Thursday, December 4, 2008

மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?


ஏகத்துவம் வலைதளத்தில் தற்போது....

கிறிஸ்தவமதத்தில் மதுபானம் அருந்துவதற்கு தடை உள்ளதா?

இயேசு பெரும் குடிகாரராக இருந்தார் என்று பைபிள் கூறுகின்றதா?

மதுபானம் அருந்துவது பற்றி இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுலின் உபதேசம் தான் என்ன? என்பவற்றை எல்லாம் ஆய்வு செய்யும் கட்டுரை

 
மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?
 
 
 
படிக்கத்தவறாதீர்...
 
கிறிஸ்தவம் தொடர்பான எமது இதர கட்டுரைகளைப் படிக்க ...
 
 
 
 

Saturday, May 10, 2008

ஜாதிய வெறி கிறிஸ்த்தவத்தில்!

இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எறையூரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஜெபமாலை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வன்னிய கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும்; தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். சாதிதீண்டாமையைக் கோட்பாட்டளவில் கிறித்துவ மதம் ஏற்காத போதிலும், இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது வன்னிய கிறித்தவர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் நீண்டகாலமாகப் பங்குத் தந்தையின் ஆசியோடு நீடித்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்குத் தனிக் கல்லறை, தனிசவஊர்தி (தூம்பா), தேவாலயத்தின் பொதுவழியைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடை, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிப்பது, சாதிவெறியோடு தாழ்த்தப்பட்டோரைக் கிண்டல்கேலி செய்து அவமதிப்பது என வன்னிய கிறித்தவர்களின் சாதிவெறிக் கொட்டம் கேள்விமுறையின்றித் தொடர்ந்து வருகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாளன்று, முகையூரில் பாதிரியாராக இருந்த எறையூரைச் சேர்ந்த தலித் கிறித்தவரான ஃபாதர் இருதயநாதனின் தாயாரது இறுதி ஊர்வலத்தைத் தேவாலயத்தின் பொதுவழியாகச் செல்லத் தடைவிதித்து, ஆயுதங்கள் வெடிகுண்டுகளுடன் சாலையை மறித்து வன்னிய கிறித்தவ சாதிவெறியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி கடலூர் மறை மாவட்டப் பேராயர் வந்து கெஞ்சியும் கூட இச்சாதிவெறியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி ஃபாதர் இருதயநாதன் தாழ்த்தப்பட்டோருக்கென விதிக்கப்பட்ட குறுகிய சந்தின் வழியாகத் தனது தாயாரின் உடலை எடுத்துச் சென்று, தலித்துகளுக்கான தனிக் கல்லறையில் அடக்கம் செய்தார். பாதிரியாருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய தலித் கிறித்தவர்களின் மீதான வன்னிய கிறித்தவ சாதிவெறியர்களின் அடக்குமுறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எறையூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த திருவிழாவின் போது தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பெண்களை செல்போனில் படம் பிடித்த வன்னிய கிறித்தவ இளைஞர்களைத் தட்டி கேட்டதற்காக வன்னிய சாதிவெறியர்கள் அடிதடி கைகலப்பில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தீண்டாமை வழக்கின் கீழ் புகார் கொடுத்ததும், மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்குப் பலசரக்குகளைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்களில் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று தடைவிதித்தனர். இந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கண்டு குமுறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள், தங்களுக்கென தனியாக சகாயமேரி மாதா ஆலயம் என்ற பெயரில் தனி தேவாலயத்தை கடந்த டிசம்பரில் கட்டியமைத்துக் கொண்டனர். இத்தேவாலயத்திற்கு புதுச்சேரிகடலூர் மறை மாவட்ட அங்கீகாரத்தையும் தனி பாதிரியாரையும் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், சாதி அடிப்படையிலான தனி தேவாலயத்தை அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தது கிறித்தவ பேராயம்.

தாங்கள் கட்டிய தேவாலயமும் முழுமையடையாமல், ஜெபமாலை அன்னை தேவாலயத்திலும் வழிபட முடியாமல் தத்தளித்த தாழ்த்தப்பட்ட மக்கள், கடந்த மார்ச் முதல் வாரத்தில் ""சாதிப் பாகுபாட்டை நீக்கு; இல்லாவிட்டால் சாதிப் பாகுபாடு காட்டும் தேவாலயத்தைப் பூட்டு'' என்று முழக்கத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனாலும் உள்ளூர் தேவாலயப் பாதிரியாரோ, மாவட்ட முதன்மை குருவோ, பேராயரோ, மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தில் சிலர் மயங்கி விழுந்த பின்னரும் எட்டிக் கூடப் பார்க்காமல் அலட்சியப்படுத்தினர்.
மதகுருபீடமே தாழ்த்தப்பட்டோரை அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பதைக் கண்ட வன்னிய சாதிவெறியர்கள் சும்மா இருப்பார்களா? ""தேவாலயத்தைப் பூட்டுவோம்னு போஸ்டராடா ஒட்டுறீங்க?'' என்று அரிவாள், தடிகளோடு மார்ச் 9ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கில் திரண்ட சாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாகத் தாக்கி அவர்களது வீடுகளை இடித்து நாசப்படுத்தி, அற்ப உடைமைகளைச் சூறையாடி வெறியாட்டம் போட்டனர். தேவாலய விவகாரத்தையொட்டி பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீசாரையும் இச்சாதிவெறியர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரு வன்னிய கிறித்தவர்களின் உயிருக்குப் பழிக்குப் பழியாக இருபது தலித்துகளைக் கொன்று பதிலடி கொடுப்போம் என்று வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் அச்சுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆசீர்வாதம் (தி.மு.க), இந்நாள் தலைவர் எம்.சி. ஆரோக்கியதாஸ் (அ.தி.மு.க.) மற்றும் பாதிரியார் இலியாஸ் ஆகிய மூவரும் கூட்டணி சேர்ந்து கொண்டு வன்னிய சாதிவெறியர்களை வழிநடத்துகின்றனர். இம்மூவர் கூட்டணியோ, வன்னிய சாதி வெறியர்களோ இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பாயவில்லை.

பானை சோற்றைப் பதம் பார்த்தாற்போல, தமிழகமெங்கும் பல தேவாலயங்களில் நிலவும் சாதிப்பாகுபாடு தீண்டாமைக்கு எறையூர் ஓர் உதாரணம். பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்லறை, வழிபாட்டு உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்ட பாதிரியாரை அவமதித்தல் எனத் தீண்டாமைக் கொடுமைகள் பரவலாக தொடர்ந்து நீடிக்கின்றன. கிறித்தவ மதம் இந்தியாவில் நுழையும் போதே, பார்ப்பன இந்து மதத்தின் சாதியதீண்டாமைகளோடு சமரசம் செய்து கொண்டுதான் படிப்படியாகக் காலூன்றியது. இன்று அது ஆதிக்க சாதியினருடன் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குமளவுக்கு மாறிவிட்டது.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பெயரளவிலாவது சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், கிறித்தவ மதத்தில் அதுகூடக் கிடைப்பதில்லை. மதச் சிறுபான்மையினர் விவகாரம் என்பதால், தொடரும் இச்சாதிவெறித் திமிரையும் தீண்டாமைக் கொடுமையையும் தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. சாதிப் பாகுபாட்டை ஒழிக்கச் சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கக் கூட அது தயங்குகிறது.

இருப்பினும், விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பாதிரியார்களும் கிறித்தவ தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை அணிதிரட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் துணையுடன் ஈஸ்டர் பண்டிகையைப் புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்து, 21 தேவாலயங்களைப் பூட்டி கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை கடந்த மார்ச் 16 அன்று நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இப்பாதிரியார்களும் தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்டோரைத் திரட்டி வந்து திருமாவளவன் தலைமையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் இவ்வளவு தேவாயலங்களிலும் வழிபாடு நடக்காததை வைத்துப் பேராயரின் பதவியே பறிக்கப்பட்டு விடும் என்பதால், அரண்டு போன கடலூர்புதுவை மறைமாவட்டப் பேராயரான ஆனந்தராயர், ""இனி சாதிப் பாகுபாடே இருக்காது; அனைவரும் தேவாலயத்தில் வழிபடலாம்'' என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாதிவெறியர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டு இதை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது அவருக்கே வெளிச்சம்.

மறுபுறம், எறையூர் வன்னிய கிறித்தவர்களோ பேராயரின் முடிவை ஏற்க மறுத்து, தங்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் மதம் மாறப் போவதாகவும் கொக்கரிக்கின்றனர். அவர்களது சாதிய அடக்குமுறையை அங்கீகரிக்கும் இந்து மதத்துக்கு அவர்கள் மாறினாலும், சொத்துரிமை வாக்குரிமையையோ, இடஒதுக்கீட்டு சலுகைகள் பதவிகளையோ அவர்கள் இழக்கப் போவதில்லை. இதனாலேயே இன்னமும் சாதியத் திமிரோடு அவர்ளால் மிரட்டி எச்சரிக்கை விடுக்க முடிகிறது.

இந்நிலையில் இச்சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் வாக்குரிமை ஜனநாயக உரிமை, இடஒதுக்கீடு உரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் ரத்து செய்யக்கோரி போராட்டங்களைத் தொடர வேண்டும். எறையூர் மற்றும் கடலூர் விழுப்புரம் மாவட்டத் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் தொடங்கியுள்ள தீண்டாமைக்கெதிரான இப்போராட்டத்தை ஆதரித்து, அனைத்து மதங்களிலும் நீடிக்கும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் பெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். இது மதச்சார்பற்ற புரட்சிகரஜனநாயக சக்திகளின் முன்னுள்ள மாபெரும் கடமை; நமது கடமை.

Friday, May 2, 2008

உண்மை வெளிவரும்

கடந்தகாலங்களில் கிருஸ்தவப் பாதிரிகளால் ச‌ர்வதேச உலகுக்கு,திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஓர் உண்மையையே இங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றோம். அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் 18ம் அத்தியாயம் 9ம் வசனத்தில்

”அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? எனக் கேட்கிறான்.

இந்த வசனத்தில் (திருக்குர்ஆன்18:9) குகையில் தங்கியவர்கள் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியோர் (சுவடிக்கு உரியவர்கள்)என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.

“அந்த ஏடு”என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை.ஆனால் ச‌மீப‌ கால‌ங்க‌ளில் அந்த ஏடுக‌ளில் இருந்த‌ செய்திக‌ள் இப்போது அம்ப‌ல‌மாகியுள்ள‌ன‌.

“சாவுக்க‌ட‌ல் சாச‌ன‌ச் சுருள்க‌ள்” என்ற‌ த‌லைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் ப‌ல‌ தட‌வை BBC யில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து.அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ செய்திக‌ள் கேட்போர் அனைவரையும் விய‌ப்பில் ஆழ்த்துவ‌தாக‌ இருந்த‌து. இந்த‌ நிக‌ழ்ச்சியின் முத‌ல் ஒளிப‌ர‌ப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அத‌ன் விப‌ர‌ங்க‌ள்:

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அர‌புச் சிறுவ‌ன் காணாம‌ல் போன‌ த‌ன‌து ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்க‌ட‌லை ஒட்டிய‌ ஜோர்டான் நாட்டு ம‌லைப் ப‌குதிக‌ளில் தேடி அலைந்தான். அந்த‌ ம‌லைப்ப‌குதி “கும்ரான் மலைப்ப‌குதி”என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌து.

ஆட்டுக்குட்டியைத் தேடிய‌ சிறுவ‌ன் அங்கிருந்த‌ குகைக்குள் பார்த்த‌ போது ம‌ண் பாண்ட‌ங்க‌ளில் சுருட்டி நிற‌ப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌ தோல் ஆவண‌ங்க‌ளைக் க‌ண்டிருக்கிறான்.அவைக‌ளில் சில‌வ‌ற்றை எடுத்து வ‌ந்து செருப்புத் தொழிலாளியான‌ த‌ன் த‌ந்தையிட‌ம் கொடுக்க‌,ம‌றுநாள் த‌ந்தையும் ம‌க‌னும் சேர்ந்து குகைக்குள் இருந்த‌ அனைத்துச் சுருள்க‌ளையும் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்து சேர்த்தார்க‌ள்.

அந்த‌ப் ப‌ழைய‌ தோல்க‌ளைத் த‌ம‌து செருப்புத் தொழிலுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ எண்னிய‌ அந்தச் சிறுவ‌னின் த‌ந்தை தோல்க‌ளில் ஹிப்ரு மொழியில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌ வார்த்தைக‌ளின் பொருள் புரியாம‌ல்,அதை அப்போது ஜோர்டான் ம‌ன்ன‌ர் ஆட்சியிருந்த‌ கிழ‌க்கு ஜெரூஸ‌ல‌தைச் சேர்ந்த‌ ஒரு ப‌ழைய‌ புத்த‌க‌க் க‌டைக்கார‌ரிட‌ம் காண்பித்திருக்கிறார்.

ஓர‌ள‌வு ஹிப்ரூ மொழிய‌றிந்த‌ அந்த‌க் க‌டைக்கார‌ர் அந்த‌ச் சுருள்க‌ள் ப‌ழ‌ங்கால‌ச் செய்திக‌ளை கொண்ட‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருதி ஒரு சில‌ தீனார்க‌ளுக்கு அத்த‌னை சுருள்க‌ளையும் அந்த‌ச் செருப்புத் தொழிலாளியிட‌மிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிருத்த‌வ‌ரான‌ அந்த‌ப் புத்த‌க‌க் க‌டைக்காரர் அந்த‌ச் சுருள்க‌ளை அந்ந‌க‌ரில் இருந்த‌ கிருத்த‌வ‌ ஆல‌ய‌த்தில் ஒப்ப‌டைத்துவிட்டார்.இந்த ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் சுருள்க‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் வெளிப்ப‌ட்ட‌து. அதில் உள்ள‌ செய்திக‌ளைத் தெரிந்து கொள்வ‌த‌ற்கு யூத‌ர்க‌ளும்,முஸ்லிம்க‌ளும் ஆர்வ‌ம் காட்டின‌ர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த‌ ம‌ன்ன‌ர் ஹூசைன் “அந்த‌ச் சாச‌ன‌ச் சுருள்க‌ள் முஸ்லிம்,யூத‌, கிருத்தவ‌ர்க‌ள் அட‌ங்கிய‌ ஒரு குழுவிட‌ம் பொதுவாக‌ ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டு அவை ஆராய‌ப்ப‌ட‌வேண்டுமென‌” என்று விண்ண‌ப்பித்தார்.

ஆனால் கிருத்த‌வ‌ப் பாதிரியார்க‌ள் “அது த‌னியார் சொத்து”என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க‌ ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.கிருத்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளுக்கும் கூட‌ அவ‌ற்றைப் ப‌டிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் அளிக்க‌ப்ப‌ட‌வில்லை.

இடைப்ப‌ட்ட‌ ஐந்தாண்டு கால‌ங்க‌ளில் ஜெரூஸ‌ல‌த்தில் இருந்த‌ பாதிரிமார்க‌ள் சில‌ குழுக்க‌ளை ஏற்ப‌டுத்தி “கும்ரான்”ம‌லைப்ப‌குதிக‌ளில் இருந்த‌ பொதுங்குக‌ளில் தேடிய‌லைந்து அங்கிருந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ள் அனைத்தையும் த‌ங்க‌ள் கைவ‌ச‌ம் கொண்டு வ‌ந்து விட்ட‌ன‌ர்.

1952 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் மாத‌ம் அனைத்துச் சுருள்க‌ளும் கிறித்த‌வ‌ப் பாதிரிமார்களி‌ட‌ம் போய்ச் சேர்ந்து விட்ட‌ன‌.ப‌தினைந்தாயிர‌ம் Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்கள் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிருத்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிபதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களை கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கு பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேரொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் “வத்திகான் சபை” முன்ன‌ணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பலங்காலச் சாசனம் அழிந்துவிடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை microfilm (நுண்ணிய படச்சுருள்)எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ கொப்பிகள் அமெரிக்காவில் உள்ள “லொஸ் ஏஞ்சல்ஸ்” நகரிலிருக்கும் ஒரு நூலகத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1990ம் ஆண்டு அந்த நூலகத்திற்குத் தலைவராக “ஐஸ்மன்” என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார்.அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி,அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்திலிருந்து நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார். அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிருத்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

“மைக்கேல் வைஸ்” என்னும் சிகாகோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ ஹிப்ரு மொழிப் பேராசிரிய‌ர் ஒருவ‌ரின் உத‌வியைக் கொண்டு அந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ளில் முக்கிய‌மான‌து என்று அவ‌ர் க‌ருதிய‌ 100 manuscripts (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிருஸ்தவ உலகத்தை உலுக்கியது என்றும்,குறிப்பாக கிருஸ்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்மென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்தய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவிலை என்றும்,அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்மென்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிருஸ்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும்,வழிபாடுகளும் ஆரம்ப கிருஸ்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்த‌ச் ச‌ட‌ங்குக‌ளுக்கும் ஏசுவின் பிர‌ச்சார‌த்திற்கும், கொள்கை கோட்பாடுக‌ளுக்கும் எந்தச் ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.அவை அனைத்தும் “ப‌வுல்”என்ப‌வ‌ரால் பிற்கால‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வை.

மொத்த‌த்தில் இப்போது ஏசுவின் பெய‌ரால் சொல்ல‌ப்ப‌டும் அனைத்துக் கிருஸ்த‌வ‌க் கொள்கைக‌ளும் பொய்யான‌வை.அவ‌ற்றை ஏசுவின் அடுத்த‌ த‌லைமுறையில் வாழ்ந்த‌ உண்மையாள‌ர்க‌ளின் வாழ்வில் காண‌முடிய‌வில்லை.

மேற்க‌ண்ட‌வாறு அறிஞ‌ர்”ஐஸ்மேன்”கூறிவ‌ரும் போது,ஒரு யூத‌ரிட‌ம் அவ‌ற்ரைப் ப‌ற்றி வாத‌ம் செய்யும் போது “it confirms quran” அது குர்ஆனை உறுதிப்படுத்திகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் “மைக்கேல் வைஸ்” என்ற அறிஞரும் பேசும் போது “it confirms islam” அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார்.இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.

ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படிக் குர்ஆனையும்,இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப்பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்

ஈஸா(அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிருஸ்தவ‌ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை என‌லாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் “ராஜ்ஜியத்தின் சுவிஷேச‌த்தை இயேசு பிரசங்கித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத்தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப்போதுமான காரணம் இருக்கிறது.

“குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பதுதான் அந்தச் சுருள்களைப் படித்த கிருஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாகத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்கமாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

எனவே உலகுக்கு நேர்வழிகாட்ட வந்த இறைவேதமாகிய திருமறைக் குர்ஆனை பொய்பிப்பதிலும், உரக்கச்சொல்லப்படவேண்டிய உண்மைகளை மறைப்பதிலும் கைதேர்ந்தவர்களே அசத்தியத்தில் வாழும் இன்றய கிருஸ்தவர்கள் என்பதனை நாம் நன்கு உணரலாம்.

Wednesday, March 26, 2008

ஈஸ்டர்: உலக மகா ஏமாற்று!

ஒருவரை ஒருநாள் ஏமாற்றலாம்; இரு நாள் ஏமாற்றலாம். நீண்ட நாட்களுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க இயலுமா?

இயலாது என உடனே கூறி விடாதீர்கள்.

இங்கே இயலும் என்பதை ஒரு மிகப் பெரியக் கூட்டமே காட்டிக் கொண்டிருக்கிறது. ஆம்.

நேற்றைய தினம் ஈஸ்டர், அதாவது மீட்பர் இயேசு உயிர்த்தெழுந்த நாள் - அவ்வாறு நாங்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். நம்ப வைக்கப்பட்டுள்ளோம் என நான் கூற என்ன காரணம் என்பதை இப்பதிவின் இறுதியில் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.

ஈஸ்டருக்கு வருவோம்.

ஈஸ்டர் தினம் வருடம் தோறும் ஞாயிற்றுக் கிழமை வருவதை அனைவரும் அறிவர். அதற்கு முந்தைய வெள்ளி அன்று இயேசு உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் தனது உயிரை ஒப்புவித்தார் எனக் கூறி துக்க வெள்ளியாக அனுஷ்டிக்கின்றனர்.

அதாவது இயேசு உயிருடன் இருக்கும் பொழுது கூறிய "சிலுவையில் ஒப்புவிக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்" எனக் கூறியது நடந்தது என கிறிஸ்தவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இது உண்மையா? பைபிள் இதனைக் குறித்து என்ன கூறுகிறது என்பதைக் கவனித்தால் உண்மை விளங்கும்.

தனது இறப்புக்கு முன் தான் உயிர்த்தெழுவதைக் குறித்து ஒரு அடையாளம் கேட்ட மக்களிடம் இயேசு கீழ்கண்டவாறு கூறுகிறார்.

40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.(மத்தேயு)

முன்னர் இறைவாக்கு அருளப்பட்ட யோனா(விரிவாக நெகேமியாவில் கிடைக்கும்) கர்த்தரிடமிருந்துத் தப்பியோட முனைந்தப் பொழுது கடலில் தூக்கி எறியப்பட்டு மீன் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தார். அதனைக் குறிப்பிட்டே இயேசு இங்கு இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இங்கு கவனிக்க வேண்டியது இயேசு எடுத்துக் கூறும் வார்த்தை "மூன்று பகல் மூன்று இரவு" என்பதாகும். சாதாரணமாக மூன்று நாள் என்றால் இன்றையக் கணக்குப் படி நாம் 72 மணி நேரம் என்போம். ஆனால் இவ்வாறு நேரக் கணக்குக் கூறுதல் 2000 வருடங்களுக்கு முன் சாத்தியமில்லை. அதனாலேயே முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி "மூன்று பகல் மூன்று இரவு" என்கிறார்.

அதாவது தான் மரணித்தப் பின் சரியாக மூன்று இரவு மூன்று பகல் கடந்தப் பின் உயிர்த்தெழுவதாகக் கூறுகிறார்.

அவர் மரணித்த நேரம் பைபிள் கணக்குப் படி:

மதியம் மூன்று மணிக்குப் பின்னர்(மத்தேயு: அதிகாரம் 27 வசனம் 46௫0)

தற்பொழுது உலக அளவில் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையை இயேசு உயிர்த்தெழுந்த நாளாக - ஈஸ்டர் எனக் கொன்டாடுகின்றனர்.

பைபிள் கூறுவதை வைத்துக் கணக்கிட்டால்...

இயேசு மரணித்த நாள் வெள்ளி மாலையையும் கணக்கில் ஒரு பகலாக இணைத்துக் கொண்டால்...

வெள்ளி : பகல் 1 இரவு 1
சனி : பகல் 1 இரவு 1
ஞாயிறு : பகல் 1 இரவு 1

ஈஸ்டர் - அதாவது தற்போதைய நேரக் கணக்குப்படி இயேசு மரணித்தப் பின் உயிர்த்தெழுந்தது திங்கள் கிழமை மாலை மூன்று மணிக்குப் பின்னராக இருக்க வேண்டும். அல்லது மேலே கூறியக் கணக்குப் படி அவர் மரணித்த வெள்ளி மாலையையும் ஒரு பகலாகக் கணக்கிட்டால் குறைந்தப் பட்சம் திங்கள் கிழமை அதிகாலையாக இருக்க வேண்டும்.

ஆனால் அவர் உயிர்த்தெழுந்ததைக் குறித்து பைபிள் என்ன கூறுகிறது தெரியுமா?

மரணித்த இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இயேசுவின் கல்லறையை ஞாயிறன்று அதிகாலை(4 சுவிஷேஷங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் யோவான் சுவிஷேஷத்தில் சூரியன் உதிக்கும் முன் இருள் விலகுவதற்க்கு முன்பே எனக் காணப்படுகிறது: பார்க்க யோவான்: அதிகாரம் 20)ப் பார்க்கச் சென்ற மரியாக்கள் அதற்கு முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக வான தூதரால் அறிவிக்கப்படுகிறார்கள்(இதிலும் மற்றொரு குளறுபடி உள்ளது. அதனை அடுத்தப் பதிவில் கூறுகிறேன்).

அதாவது ஞாயிறு அதிகாலை சனியின் இரவு விலகும் முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாகப் பைபிள் கூறுகிறது.

அவ்வாறு நோக்கினால் வெள்ளி மற்றும் சனியின் இரு இரவுகள் மற்றும் சனியின் ஒரு பகல் பொழுது கடந்த உடனேயே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார்.

அதிகபட்சமாக வெள்ளியின் மாலையை ஒரு பகலாக இணைத்துக் கொண்டாலும் இரு பகல் இரு இரவு முடியும் முன்பே சிலுவையில் மரணித்த இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக அதே பைபிள் கூறுகிறது.

அதாவது பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இயேசுவின் கூற்றான, "மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்" என்பதற்கு மாற்றமாக அதிகபட்சம் இரு பகல் இரு இரவு முடியும் முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக பைபிளும் அதனை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் நம்பிக் கொண்டாடுகின்றனர்.

உலகில் இதனை விட மிகப் பெரிய ஏமாற்று அல்லது அதி முட்டாள்தனம் வேறு ஏதாவது இருக்குமா?

மதத்தின் மீதான நம்பிக்கை மக்களை 2000 வருடங்களுக்கும் மேலாக அடிமுட்டாள்களாக ஆக்கி வைத்திருப்பது கிறிஸ்தவத்தினால் மட்டுமே முடியக் கூடியது என்றாலும் அது மிகையாக இராது.

நன்றி: ஈஸ்டர்: உலக மகா ஏமாற்று!

Friday, March 21, 2008

கிறிஸ்த்தவம் கேள்வி பதில்

இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?irvanm(at)reedifmaildotcom

சிறு சிறு வேறுபாடுகள் என்று ஏராளமாக இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடுகள் சில உள்ளன.

ஒன்று. இயேசு இறைத்தூதரா.. அல்லது இறை மகனா...

கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இயேசுவை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்ட பைபிளும் குர்ஆனும் இயேசுவை இறைத்தூதர்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. அவர் இறை மகன் அல்ல என்று குர்ஆன் திட்டவட்டமாகவும் வன்மையாகவும் மறுத்துள்ளது. அதே போன்று பைபிளும் பல்வேறு இடங்களில் கர்த்தருக்கு சந்ததித்தேவையில்லை. மகன்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

''அல்லாஹ் (தேவன்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68)

இரண்டு. கிறிஸ்த்துவத்தின் சிலுவைப்பாடு.

சிலுவையில் அறையப்பட்டது இயேசுதான் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துதான் சிலுவை வணக்கங்கள் தோன்றின. ஆனால் குர்ஆன் சிலுவை சம்பவத்தை அடியோடு மறுக்கின்றது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை. அவரை கர்த்தர் காப்பாற்றி தன்னலவில் உயர்த்திக் கொண்டார் என்பது குர்ஆன் முன் வைக்கும் முடிவு. பைபிளில் இடம் பெறும் சிலுவை சம்பவங்களை ஊன்றி படித்தால் கூட அதில் உள்ள முரண்பாடுகள் இயேசுவின் சிலுவை மரணத்தை கேள்விக்குறியாக்குகின்றன.

(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)

மூன்று. பைபிளின் நிலை.

பைபிளை வைத்தே கிறிஸ்த்தவம் தீர்மானிக்கப்படுகின்றது. பைபிள் பல்வேறு வரலாற்று குறிப்புகள், ஆங்காங்கே மனிதர்களின் சுய கற்பனைகள் போன்றவற்றின் தொகுப்பேயாகும். முஸ்லிம்கள் இந்த முடிவில் இருக்கும் போது ஆய்ந்தரிந்த பல கிறிஸ்த்தவர்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள். பைபிள் கர்த்தரால் இறக்கப்பட்ட புனித வேதமல்ல. இயேசுவுக்கு கர்த்தர் கொடுத்த வேதம் இன்றைக்கு இருக்கும் பைபிளல்ல. இயேசுவுக்குப் பின் அந்த வேதம் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. அந்த மாற்றங்களின் தொடர் பல காலம் நீடித்தது.(பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து ஒரு விரிவான கட்டுரை விரைவில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அப்போது அது இறைவேதத்திற்குரிய தகுதியில் உள்ளதா என்பதை கண்டுக்கொள்ள முடியும்).

நான்கு. இயேசு இறுதித் தூதரா..

இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் கிறிஸ்த்துவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். பைபிளின் பல பகுதிகளை நம்பும் அவர்கள் இயேசுவை கடைசித் தூதர் என்று நம்பியுள்ளனர். அவர் கடைசித்தூதர் என்று அவர்கள் நம்பியுள்ள பைபிளின் எந்தப்பகுதியும் அறிவிக்காத நிலையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தததை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு வந்து சத்தியப்பாதையைக் காட்டும் ஒரு தேற்றவாளர் (இறைத்தூதர்) குறித்த அறிவிப்பை பைபிளில் காணலாம்.

நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)

திருக்குர்ஆனும் - இயேசுவும்

ஒரு மதம் இன்னொரு மதத்தை கண்டுக் கொள்ளாமல் தனித்து போய் விட்டது போன்று இஸ்லாம் இல்லை. மோசே என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் மூஸாவின் வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துச் சொல்வது போன்று இயேசுவைப் பற்றி குர்ஆன் விரிவாக பேசியுள்ளது. பைபிளில கிடைக்காத பல சம்பவங்கள் குர்ஆனில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேரி என்றும் மரியாள் என்றும் அழைக்கப்படும் இயெசுவின் தாயார் மரியம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அதிக இடங்களில் குர்ஆனில் விவாதிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. என்று வரலாற்று தொகுப்பில் எழுதி வருகிறோம்). பைபிளில் கைகழுவப்பட்ட இஸ்மவேல் என்ற ஆப்ரஹாமின் மகனுடைய வம்சத் தோன்றலில் ஏற்பட்ட உலகப்புரட்சியை கிறிஸ்த்தவ உலகம் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன.

மிக முக்கியமான ஒரேக் கொள்கையை போதிக்க வந்த மோசே மற்றும் இயேசு போன்றவர்கள் அவர்கள் காலத்து மக்களால் துன்பத்துக்கு ஆளானார்கள் என்றால் அவர்களுக்குப் பின் அவர்கள் போதித்து சென்றக் கொள்கை மதகுருக்களால் துன்பத்துக்கு ஆளானது. இதையெல்லாம் குர்ஆன் விரிவாக விவாதிக்கின்றது

இதுதான் முக்கியமாக கிறிஸ்த்தவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவைகளாகும். தேவன் உங்களை இரச்சிப்பார் என்ற போதனையை சொல்லியே கிறிஸ்த்தவ மத போதகர்கள் கிறிஸ்த்தவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாடுபடுகிறார்கள். உண்மையில் தேவன் மனிதர்களை இரட்சிக்க வேண்டுமென்றால் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தித்தால் மட்டும் போதாது. தேவன் எதற்காக பகுத்தறிவைக் கொடுத்தாரோ அந்த அறிவை அவர் காட்டியுள்ள வழிகளுக்காக விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்றால் அவர்களிடம் குர்ஆனின் போதனைகள் செல்ல வேண்டும்.
...............................................................................................

நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முஸ்லிமாக இருந்து இஸ்ரவேலர்களிடம் *கர்த்தரின் பக்கம் திரும்புங்கள்* என்று பிரச்சாரம் செய்த இயேசு, கிறிஸ்த்தவம் என்ற எந்த ஒரு தனிமதத்தையும் உருவாக்கவில்லை. அவ்வாறு துணியும் அதிகாரம் அவருக்கு இல்லை.

வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தர்் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா(இயேசு) எனும் மஸீஹ் கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும்், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.(அல்குர்ஆன் 4:171-172)
கிறிஸ்த்தவ மதம் என்பது இயேசுவோடு சம்பந்தப்பட்டதல்ல. அவருக்கு பின் 'அவரது பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டேன்' என்று சொல்லிக் கொண்டு வெளிபட்ட பவுல் தான் கிறிஸ்த்தவத்தின் தந்தை - நிறுவனர். பவுல் என்பவர் இல்லையென்றால் உலகில் இன்றைக்கு கிறிஸ்த்தவம் என்பது இருந்திருக்காது. மாறாக இயேசுவின் உண்மையான அழைப்பும் போதனைகளும் ஓரளவு மக்களுக்குக் கிடைத்திருக்கும். பவுல் வந்தவுடன் அந்த மக்களால் இயேசு மறக்கடிக்கப்பட்டு பவுல் உருவாக்கிய இயேசுவே மக்களிடம் முன்னிருத்தப்பட்டு விட்டார். எனவே கிறிஸ்த்துவத்திற்கும் இயேசு என்று அழைக்கப்படும் அந்த இறைத்தூதருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
......................................................................................................................

முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான்.இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன.வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன் தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.

அப்பொழுது ''உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். (ஆதியாகமம் 38:13-29)

மாமனாருடன் மாமனாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தைப் பெற்ற இந்த தாமாரின் வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் கூறுகின்றது

மகள் தந்தைக்கு மதுவைக் கொடுத்து தன்னைக் கர்ப்பவதியாக்கிக் கொண்டது என்று பட்டியல் போடலாம்.
புனிதத்துவத்தை தீர்மானிப்பதில் கிறிஸ்த்தவ உலகில் ஏற்பட்டு நிற்கும் மாறுபாடுகளையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.
கத்தோலிகர்களிடம் உள்ள பைபிளில் 73 தொகுப்புகள் உள்ளன. இதை அவர்கள் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்த்தவர்களில் உள்ள புரோட்டஸ்டண்ட் களிடம் உளள பைபிளில் 66 தொகுப்புகளே உள்ளன. கத்தோலிகர்களிடம் உள்ள கூடுதலான 7 தொகுப்புகளை இவர்கள் நிராகரித்து விட்டனர்.
கர்த்தருடை வார்த்தைகளுடன் ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னை கடிந்துக் கொள்வார் என்று பைபிள் கூறுகின்றது. (நீதிமொழிகள் 30:5)
இப்போது கத்தோலிகர்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா.. அல்லது புரோட்டஸ்டண்ட்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா..என்றெல்லாம் கிறிஸ்த்தவ உலகம் சிந்தித்தால் பைபிள் புனிதமானது என்ற நம்பிக்கையை அவர்கள் மறு பரிசீலனை செய்யத்துவங்கி விடுவார்கள்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை நாம் இயேசு(ஈஸா) விற்கு கர்த்தரால் ஒரு வேதம் கொடுக்கப்பட்டது என்பதை நம்புவோம். ஆனால் அது பைபிளல்ல. அந்த வேதம் அந்தகாலத்து மதகுருமார்களுக்கு தேவையான அளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இறைவேதத்தில் நீக்குவதும் சேர்ப்பதும் அவர்களைப் பொருத்தவரை சாதாரணமாகி விட்டது. இன்றைக்கும் கூட பைபிளின் சில பகுதிகளை நீக்க கிறிஸ்த்தவ உலகில் சில மேலிடங்கள் யோசித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால் தான் நாம் பைபிளை புனித வேதமல்ல என்று கூறி வருகிறோம்.
பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு கட்டுரை வெளிவரும். அதில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும்.
............................................................................

கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் ஒருவர் மதம் மாறுவதையோ இன்ன பிற உலக ஆசைகளுக்காக மதம் மாற எண்ணுவதையோ இஸ்லாம் அடியோடு மறுக்கின்றது. நித்திய ஜீவன் என்றக் குறிக்கோளும், அதற்கான தேடலும் இருந்து உண்மையை கண்டு மனமாற்றம் அடைவதே உண்மையான மாற்றமாகும். அத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் விரும்புகின்றது.
இயேசு உங்கள் பாவங்களுக்கான தம்மை பலியாக்கிக் கொண்டார், இயேசுவை விசுவாசிப்பதே நித்திய ஜீவன், இயேசுவின் பக்கம் மனம் திரும்புங்கள் என்று சில சுலோகங்களை திரும்ப திரும்ப மீடியாக்கள் வழியாக கிறிஸ்த்தவ மக்களிடம் கொண்டு போய் ஒருவித மயக்கத்தை மத போதகர்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் பைபிளின் அனைத்துப் பகுதிகளையும் ஆழ்ந்து படித்து பரிசீலியுங்கள் என்ற திறந்த மனப்பான்மையோடு கிறிஸ்த்தவ போதகர்கள் பிரச்சாரம் செய்து தம் மக்களைத் தூண்டட்டும் பார்க்கலாம்.
நாம் கிறிஸ்த்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்றோம் இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் ஏற்றுக் கொண்ட இயேசு, மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார். *கர்த்தரை மட்டும் வணங்கி அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழுங்கள்* என்ற இஸ்லாத்தின் அடிப்படையான போதனையே இயேசுவின் போதனையாக இருந்தது.
கிறிஸ்த்தவர்கள் மனமுரண்டாக இஸ்லாத்தை நிராகரித்தே வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வருகின்றார்களா என்றால் அதுதான் இல்லை. ஆண்டாண்டுக் காலமாக மதகுருக்களின் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் மேற்கத்திய மீடியாக்களின் இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகளும் அவர்களின் மனங்களில் வேறூண்றியுள்ளன.

இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் இஸ்லாம் குறித்த ஆய்வில் (தப்பான மனநிலையோடு அனுகாமல்) இறங்க வேண்டும். இஸ்மவேலின் வழிதோன்றலில் வந்த முஹம்மத் அவர்கள் பரலோக ராஜ்யத்தின் மீட்சிக்கான வழியை காட்டி சென்றுள்ளார்கள். இயேசுவின் பணியையும் யூதர்களால் இயேசுவுக்கு ஏற்பட்ட இன்னல்கள், இயேசுவுக்கு கர்த்தரிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பு, இறுதி தீர்ப்பு நாளின் அடையாளமாக இயேசுவின் வருகை குறித்தெல்லாம் விளக்கமாக சொல்லி விட்டு சென்றுள்ளார்கள்.

மேற்குலக மீடியாக்களின் வண்யுக்தியை புறக்கணித்து ஒரு ஆய்வாளனாக குர்ஆனையும் முஹம்மத் அவர்களின் வாழ்க்கையையும் படிக்கத் துவங்கும் எந்த கிறிஸ்த்தவரும் இஸ்லாம் மீதான கடந்தக் கால தம் எண்ணங்களுக்காக நிச்சயம் வருந்துவார். குர்ஆன் மீதும் முஹம்மத் அவர்களின் மீதும் தாம் கொண்டிருந்த தப்பபிப்ராயத்திற்கு தேவனிடம் பாவமன்னிப்புக் கேட்பார்.

இதுதான் இஸ்லாம்

இயேசு மட்டும் இறைமகனா...-2

இயேசு மட்டும் இறைமகனா...-2 அபூ அரீஜ்

இயேசு தன்னைக் குறித்து புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட (81) இடங்களில் தான் 'மனித குமாரன்' என்று கூறுகின்ற அதே நேரம், இயேசுவை இறைவனின் குமாரன் என்று நம்பி, அதைப் பிரச்சாரம் செய்யக் கூடிய கிறிஸ்தவ சகோதரர்கள் 'இயேசுவைத் தம் குமாரர்' என்று கர்த்தர் கூறுகின்றார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

'அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி 'இவர் என்னுடைய நேச குமாரன்' இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது' (மத்தேயு 3:17)

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இயேசுவை இறைமகன் என்று நம்பக் கூடிய கிறிஸ்தவர்கள், அதே பைபிள் இன்னும் பலரை இறைமகன் என்று பைபிள் கூறுவதைக் கண்டு கொள்வதே இல்லை!!

'இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திரன்... என்று கர்த்தர் சென்னார்' (யாத்திராகமம் 4:22)

முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனமாகும். இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. ஒரு அசரீரியான சப்தம் தான் இவ்வாறு கூறியதாகக் காணப்படுகின்றது. அது கடவுளின் சப்தமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, பிசாசு கூட இவ்வாறு விளையாடியிருக்க முடியும். முன்பொரு முறை பிசாசு இயேசுவை சோதித்ததாக மத்தேயு (4:9,10) வசனங்கள் கூறுகின்றன. எனவே இயேசுவை விட இஸ்ரவேல் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.

அதுமட்டுமல்ல, பவுல் எனப்படும் சவுலின் சொந்தக் கற்பனை தான் இக்கூற்று என்பதனை கீழ் வரும் வசனங்கள் குறிப்பிடுகின்றன.

'சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்' (அப்போஸ்தலர் 9:19,20).

உங்கள் சிந்தனைக்கு பைபிளில் இன்னும் இறைமகன்கள் (?) பட்டியல் தொடர்கின்றது!

'நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்' (சங்கீதம் 2:7)

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறியிருக்கிறார்.

மேலும் இன்னும் அநேக வசனங்களில்,

'அவன் (சாலமோன்) எனக்குக் குமாரனாய் இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்' (முதலாம் நாளாகமம் 22:10)

'இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்' (எரேமியா 31:9)

'நான் அவனுக்கு (சாமுவேலுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்' (இரண்டாம் சாமுவேல் 7:14)

'நான் அவனுக்கு (தாவீதுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்' (முதலாம் நாளர்கமம் 17:13)

இத்தனை தேவ குமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன் என்று கூறுவது பைபிளின் போதனைக்கே முரணாகாதா? சிந்தித்து உணர்வீர்களாக. அதே நேரம் 'இறைமகன்' எனும் அடைமொழி 'கடவுளின் புத்திரர்கள்' எனும் கருத்தில் பைபிளில் பயன் படுத்தப்படவில்லை, மாறாக 'இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இயேசு 'இறைமகன்' எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக்கூடிய கிறிஸ்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இக் கேள்விக்கு கிறிஸ்தவ உலகில் விடை இல்லை!

என தருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! எமது நோக்கம் உங்களை நோவினைப்படுத்த வேண்டும் என்பது துளி கூட கிடையாது. மாறாக நீங்கள் சிந்தித்து சத்தியத்தை உணர்ந்து தெளிவோடு எதிலும் செயலாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இன்னும் பல வசனங்கள் இறைமக்கள் என பலரைக் குறிப்பிடுவதைப் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்: -

உபாகமம் 14:1, சங்கீதம் 68:5, மத்தேயு 6:14-15, 5:9, 5:45, 7:11, 23:9, யோவான் 1:12, லூக்கா 6:35, அப்போஸ்தலர் 17:29, ரோமர் 8:16, இரண்டாம் கொரிந்தியர் 6:18

எனவே சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

இறைவன் தன்னுடைய இறுதி வேதத்தில் கூறுகிறான்: -

''சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சயம் அசத்தியம் ஒழிந்தே தீரும்' (இறுதி வேதம் 17:81)

தொடரும் (சுவனனத்தென்றல்)